Apr 10, 2021 04:27 pm
கேள்வி 01:- வரவர உங்கள் பதில்கள் நீநீநீநீநீநீநீளமாய்ப் போவது ஏன்? பதில்:- வரவர உங்கள் கேள்விகள் ஆஆஆஆஆஆழமாய்ப் போவதால். உலகநாதரின் ஒப்பீனியன்: 'ஆஆஆஆஆ ....வ்' (இது கொட்டாவி) ❆❆❆❆❆❆ ❆❆❆❆❆❆ ❆❆❆❆❆❆ கேள்வி 02:- புற்றுநோயை வருவிக்கத்தக்க நஞ்சுப்பொருள் தேங்காயெண்ணெயில் கலந்திருக்கிறதாமே? பதில்:- அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? முகநூல்க்காரர்கள் ஒவ்வொரு …
மேலும் படிப்பதற்குApr 10, 2021 04:15 pm
உலகம் செழித்தற்கு, தன் காவியம் காரணமாதல் வேண்டுமென, அருளால் காவியம் செய்யத் தலைப்பட்ட, கவிச்சக்கரவர்த்தி கம்பன் விரும்புகின்றான். உலகம் மங்கலமுற, மங்கலச் சொல்கொண்டு காவியம் தொடங்குதல் மரபு. ஒலியால் உருவான உலகில், ஒலிகள் பயன்செய்தல் இயல்பன்றோ? ஒவ்வோர் சொல்லின் ஒலியும், ஒவ்வோர் விதமாய்ப் பயன் விளைக்குமாம். நம் ஞானியர், தம் யோகக்காட்சியால், தமிழ்ச் சொற்களுள், மங்கலத்தன்மை கொண்டவற்றை இனங்கண்டு, வரிசைப்படுத்தினர். அவற்றுள் …
மேலும் படிப்பதற்குApr 09, 2021 10:35 am
✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ முன்னைய பாகங்களைப் படிக்க ➧➧➧ ✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦✦ உயர் அந்தண குலத்தில் தோன்றிய கணவர், தன் குலவழக்கிற்கு ஏற்பச் சிவன்மேல் எல்லையற்ற காதல் கொண்டிருந்ததையும், கிரியைநெறியில் அவர் எல்லையில்லாத பற்றுக் கொண்டிருந்ததையும், ஆகமமுறைப்படியான பூசை அநுட்டானங்களைப் பேணுவதில், அவர் கடுமையான அக்கறை கொண்டிருந்ததையும், நஞ்சினை மிடற்றில் வைத்த சிவனார்மேல் பேரன்பு பூண்டதால், அவரை நீலநக்கர் …
மேலும் படிப்பதற்குApr 08, 2021 02:18 pm
கோட்டத்தின் மேல்மாடி திறப்பு விழாவும், இசைநிகழ்ச்சிகளும் கம்பன் கோட்டக் கட்டிடம், பல கட்டமாகக் கட்டப்பட்டதை முன்னரே சொல்லியிருக்கிறேன். முதலில் அத்திவாரமிடப்பட்டு தளமிடுமளவுக்கு, கீழ்க்கட்டிடம் ஓரளவு பூர்த்தியானது. இக்காலத்தில் தான் இந்திய இராணுவம் இங்கு முகாமிட்டது. அதன் பின்னர் கழக அன்பர், மனோகரபூபன் அவர்களுடைய துணையால், கீழ்க்கட்டிடம் முழுவதும் அழகுபடுத்தப்பட்டு முழுமையாய்ப் பூர்த்தியானது. அதன்பின்தான் கம்பன்கழக அலுவலகம், இங்கே இயங்கத் …
மேலும் படிப்பதற்குApr 04, 2021 12:24 pm
கேள்வி 01:- கடந்தவாரம் அமரபுர மஹா நிக்காய மகாநாயக்க தேரரின் மறைவையொட்டி அரசாங்கம் நாடுபூராவும் துக்கதினத்தை அறிவித்திருந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? பதில்:- பாராட்டவேண்டிய விடயம்தான். துறவிகளுக்கு முதன்மை கொடுப்பதை தமிழர் பண்பாடும் ஏற்கிறது. அதனால்த்தான் நம் வள்ளுவக் கடவுளார் தன் நூலின் ஆரம்பத்திலேயே 'நீத்தார் பெருமை' எனும் அதிகாரத்தை …
மேலும் படிப்பதற்குApr 03, 2021 11:11 am
உலகுக்குப் பொதுவான இறையை, தன் கவியுள் அடக்க நினைந்து கடவுள் வாழ்த்தைப் பாடத்தலைப்பட்ட கம்பன், இறைவனோ, 'உணர்ந்து ஓதற்கரியவன்', சிந்தனைக்கும் மொழிக்கும் அகப்படாதவன், எனினும், அன்பால் நினைவார்தம் அகம்படுபவனுமாம். அகப்படாமையும் அகம்படுதலும், அவ்வாண்டவன்தன் அலகிலா விளையாட்டன்றோ! இறைவன் குணம் குறி அற்றவன். இது இயல்பு, இது வடிவு என இயம்புதற்கரியன். எது இயல்பு, எது வடிவு எனக் …
மேலும் படிப்பதற்குApr 02, 2021 11:02 am
உளம் அதிரும்படியாகக் கணவன் சொன்ன வார்த்தை கேட்டும், ஞானவதியின் முகத்தில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை. அவள் மௌனமாய்த் தலைகவிழ்ந்து நிற்கிறாள். வேறு பெண்களாக இருந்திருந்தால், திருநீலநக்கரின் சபதம் கேட்டு அதிர்ந்திருப்பார்கள். ஆனால் ஞானவதியோ கணவரின் சபதம் கேட்டும், பிரதிபலிப்பு ஏதுமின்றி அசையாது நின்று கொண்டிருக்கிறாள். அவள் முகம் சாந்த சொரூபமாகவே …
மேலும் படிப்பதற்குApr 02, 2021 12:40 am
உதயன் சரவணபவன் இவர் இப்போது பாராளுமன்ற உறுப்பினராய் இருக்கின்றார். நாங்கள் கம்பன் கழகம் ஆரம்பித்த பல காலத்தின் பின்தான், வித்தியாதரன் எனக்கு இவரை அறிமுகம் செய்து வைத்தான். அப்பொழுதுதான், வெளிநாட்டில் படித்து முடித்துவிட்டு, அவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார் என்று நினைக்கிறேன். இவருடைய தமக்கையின் கணவர், 'ஷப்ரா' என்கின்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். அந்நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளையினைப் பொறுப்பேற்று, சரவணபவன் யாழ் வந்திருந்தார். ஆற்றல் …
மேலும் படிப்பதற்குMar 28, 2021 01:38 pm
கேள்வி 01:- தமிழ்நாட்டின் தற்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றியும் தனிஈழம் அமைப்பது பற்றியும் சொல்லியிருப்பதைப் பார்த்தீர்களா? பதில்:- பார்க்காமல் என்ன? அ.தி.மு.க வெறுமனே சுழலும் பம்பரம்தான். தேர்தலில் அதனோடு கூட்டுச் சேர்ந்திருக்கும் பாரதீய ஜனதாக்கட்சிதான் அதனைச் சுழற்றிவித்துக் கொண்டிருப்பதாய், அரசியல் அவதானிகள் …
மேலும் படிப்பதற்குMar 28, 2021 01:05 pm
உலகை உய்விக்க, இராமகாவியம் செய்தான் கம்பன். 'அறம் வெல்லும் பாவம் தோற்கும்' எனும் பாவிகத்தை, தன்காவியத்தின் ஊடுபொருளாக்கி, மனுக்குலத்திற்கு, அறம் உரைக்கத் தலைப்பட்டான் அவன். மூலஅறம், சார்பறம் என அறம் இருவகைப்படும். மூலஅறம், எத்தேயத்திற்கும், எவ்வினத்திற்கும், எம்மதத்திற்கும், பொதுவானதாம். அவ் உண்மை உணர்ந்த கம்பன், தான், குறித்தவொரு மொழி, மதம், இனம் சார்ந்து இருப்பினும், தன் காவியம், உலகத்தார் அனைவர்க்கும் …
மேலும் படிப்பதற்குMar 25, 2021 09:44 pm
உள்ளம் சோர்ந்து போகிறது சுந்தரருக்கு, அரண்மனையிலிருந்து தன்னை வரவேற்க வந்த கூட்டத்தில், கலிக்காமரைக் காணாததால் மீண்டும் சுந்தரர் மனதில் கலக்கம். கலிக்காமர் தன்னை வரவேற்க ஏன் வரவில்லை எனும் கேள்வி குழப்ப, தயங்கி நின்ற சுந்தரரை கலிக்காமரின் உறவுக்கூட்டம், இன்முகம் காட்டி வரவேற்கிறது. சுந்தரருக்குப் பாதபூசை செய்து, இனிய வார்த்தைகள் …
மேலும் படிப்பதற்குMar 25, 2021 12:26 pm
உற்பாதங்கள் நிகழ்ந்தன ஒருவருக்கு நன்மை, தீமை நடப்பதன் முன், அதுபற்றிய சில முன் எச்சரிக்கை அடையாளங்கள் தெரியவரும் என்று, நம் மூதாதையர்கள் சொல்லியிருக்கிறார்கள். அங்ஙனம் நன்மைக்கு முன்பாக வரும், எச்சரிக்கை அடையாளங்களை 'சகுனம்' என்றும், தீமைக்கு முன்பாக வரும் எச்சரிக்கை அடையாளங்களை, 'உற்பாதம்' என்றும் உரைப்பது வழக்கம். இவ்வாண்டில் எங்களுக்குப் பல உற்பாதங்கள் …
மேலும் படிப்பதற்குMar 25, 2021 06:39 am
கேள்வி 01:- இந்த நூற்றாண்டின் பெரிய அதிசயமாய் வெளிக்கிரகவாசிகளின் தொடர்புதான் இருக்கப் போகிறது என்று முன்பு பதில் சொல்லியிருந்தீர்கள். இதுபற்றிச் சொல்ல நீங்கள் என்ன விண்வெளி ஆராய்ச்சியாளரா? அறிவியல் சார்ந்த இந்த விடயத்தையும் உங்கள் இராமாயணம் என்று நினைத்துவிட்டீர்களா? பதில்:- விஞ்ஞானம் படித்தவன் தமிழ் பற்றிப் …
மேலும் படிப்பதற்குMar 20, 2021 03:23 pm
உலகம் வியக்கும் நம் தமிழ் எழுத்துக்களின் அமைப்புப் பற்றி, மேலும் சில சிந்திக்கலாம். எழுத்துக்களின் பிறப்புரைக்கும் நம் இலக்கண நூல்கள், ஆய்த எழுத்தின் பிறப்பை வரையறை செய்கின்றன. ஒரு குற்றெழுத்தினதும், வல்லின உயிர்மெய்யினதும் இடையிலேயே, ஆய்த எழுத்துப் பிறக்கும் என்பது இலக்கணம். அஃது, இஃது போன்ற சொற்கள் இவ்வுண்மைக்காம் உதாரணங்கள். இன்றைய …
மேலும் படிப்பதற்குMar 19, 2021 04:42 pm
உளமெல்லாம் பேரதிர்ச்சி கொண்டதம்மா! ஒப்பற்ற பெருங்கலைஞன் மறைவைக் கேட்டு நிலமெல்லாம் ஈழத்தின் பெருமை சொல்ல நிமிர்வோடு இசைக் கலையின் நுட்பம் கற்று வளமிகுந்த தன் குரலால் பலரும் போற்ற வாரித்தான் இசைக்கொடையை வழங்கி நின்ற பலர் புகழ்ந்த எம் ஐயன் பாரை நீத்தான் பதறித்தான் இசை உலகம் வாடிற்றம்மா! எப்போதும் இசைக்கடலில் மூழ்கி …
மேலும் படிப்பதற்குMar 19, 2021 04:28 pm
உளம் பதைக்க நின்றுகொண்டிருக்கிறார் சுந்தரர். கலிக்காமரின் அரண்மனை வாசலுக்குத் தான் வந்து இவ்வளவு நேரமாகியும், அரண்மனையின் உள்ளிருந்து தன்னை அழைக்க யாரும் வராதது, அவர் மனதில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மெய்யடியாரான கலிக்காமர் தன்னை மன்னிக்காமலே விட்டுவிடுவாரோ? என்ற எண்ணமே சுந்தரரின் மனப்பதைப்புக்குக் காரணமாய் இருந்தது. நடந்து முடிந்த சம்பவங்களை …
மேலும் படிப்பதற்குMar 19, 2021 04:12 pm
பகை மேகம் சூழ்ந்தது இக்கால கட்டம் கம்பன் கழக வரலாற்றில். மறக்கமுடியாத இருள் நிறைந்த காலகட்டமாய் அமைந்தது. அதுவரை எம்மோடு அன்பாய் இணைந்திருந்த பலர், பகையாகி பலவிதத்திலும் கழகத்திற்கு தீங்கு இழைக்க முயன்றனர். தனித்து யாருக்கும் நாம் தீங்கு செய்யாவிட்டாலும், கொள்கைப்பிடிப்போடு நாம் வாழ நினைத்தது, பலருக்கும் இடைஞ்சலை உண்டாயிற்று. நம்மைப் போல இவர்களும், ஏன் …
மேலும் படிப்பதற்குMar 16, 2021 06:01 am
கேள்வி 01:- ஆலயங்களில் பஞ்சாமிர்தம் போடுகிறார்களே. அதுபற்றி உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா? பதில்:- என்ன கிண்டலா? 'இதுதான் உமக்குரிய விடயம்' என்று சொல்லாமல்ச் சொல்ல வருகிறீர்களா? தாராளமாய்ச் சொல்லிவிட்டுப் போங்கள். இதுவும் எனக்குரிய விடயம் தான்! 'குமாரதந்திரம்' என்கின்ற ஆகம நூலின் 21 வது படலத்தில் பஞ்சாமிர்த விதி என்ற …
மேலும் படிப்பதற்குMar 13, 2021 01:34 pm
உலகுயிர்கள், ஆண், பெண், அலி என மூவகைப்படும். இவற்றுள் அலிப்பிறப்பென்பது, ஆணும் பெண்ணும் கலந்த நிலை. இயற்கையில் உள்ள இம்மூவகைப்பிறப்பு நிலைகளும், தமிழ் எழுத்துக்களிலும் உரைக்கப்படுகின்றன. இலக்கணநூல்கள், உயிரெழுத்துக்களை ஆண் எழுத்து என்றும், மெய்யெழுத்துக்களைப் பெண் எழுத்து என்றும், ஆய்த எழுத்தினை அலி எழுத்து என்றும் உரைக்கின்றன. தமிழ்மொழிப்பிரயோகத்தில் ஆய்த எழுத்து, சிலவேளைகளில் உயிரெழுத்தாயும், சிலவேளைகளில் மெய்யெழுத்தாயும் …
மேலும் படிப்பதற்குMar 12, 2021 02:04 pm
உறவெல்லாம் கதறி நிற்க, தன் கண்ணீரை நிதானமாய்த் துடைத்துக் கொண்டு, பேசத் தொடங்குகிறாள் சிவனருட்செல்வி. 'யாரும் அஞ்சாதீர்கள்! உடனடியாக உங்கள் கவலையை விடுங்கள். எங்கள் ஐயன் வெறுமனே இறந்துபோகவில்லை. ஒரு நோக்கத்திற்காகவே தன் உயிரைத் துறந்திருக்கிறார். அவரது நோக்கத்தை நிறைவேறச் செய்வதுதான் எமது கடமையாகும். சுந்தரரைக் காண விரும்பாததாலேயே அவர் தன் …
மேலும் படிப்பதற்கு