மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 4

மீண்டும் கம்பவாரிதிக்கு வலம்புரியின் பதில் | பகுதி 4
 
கடந்த இருவாரங்களுக்கு முன்பு, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும், அதுதொடர்பாக வடக்குமாகாண முதலமைச்சர் மீதான ஐயங்களையும் கருவாகக்கொண்டு கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்கள் எழுதி உகரத்தில் வெளியான "கொழும்பின் சதியா? யாழின் விதியா?" எனும் கட்டுரை பெரும் அதிர்வினை உருவாக்கியது வாசகர் அறிந்ததே.

அக்கட்டுரையில் தமிழ் மக்கள்  பேரவை தொடர்பாகவும், முதலமைச்சர் தொடர்பாகவும் சொல்லப்பட்ட விடயங்களை தெளிவுபடுத்தும் முகமாக வலம்புரியில் அடுத்தடுத்த நாட்களே, புருசோத்தமன் எனும் புனைபெயரில் "கம்பவாரிதிக்கு ஓர் அன்புமடல்" எனும் தலைப்பில் மூன்று பாகங்களாக கட்டுரை வெளியாகியது. உகரமும் 'பத்திரிகா தர்மத்தை' மதித்து அதனைப்பிரசுரித்தது.
 CLICK HERE TO DOWNLOAD
 
தொடர்ந்து அம்மடலுக்கு பதில்மடலாக "வலம்புரி புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல்" எனும் தலைப்பிலே உகரத்தில் மூன்று பாகங்களாக கம்பவாரிதியின் மடல் வெளியாகியது. 'வலம்புரியும்' அதனை அப்படியே வெளியிட்டு தன் ஊடக தர்மத்தை கூட்டிக்கொண்டது. அத்தோடு நின்றுவிடாமல் மீண்டும் கம்பவாரிதியின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறது. அதன் பாகம் 4 இன்றைய வலம்புரியில் வெளியாகியது. அதனை இங்கு உகரம் வாசகர்களுக்காக மீள்பிரசுரம் செய்கிறோம்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 
கம்பவாரிதிக்கு புருசோத்தமனின் பதில்! 04
2016-01-07 10:32:25
 
 
பேரன்பும் பெருமதிப்பும் மிக்க கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களே!
திருநெல்வேலியில்  நொதேன் தனியார் வைத்தியசாலையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு நீங்கள் வருகை தந்து உரையாற்றினீர்கள். காலம்  உணர்ந்த உரை அது. தள்ளா விளையுள்ளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை முன்னிறுத்தி  கருத்துரை தந்தீர்கள். எனினும் எங்கள் மண்ணில் தக்காருக்கு ஏற்பட்ட பஞ்சமே அநேகமான பிரச்சினைகளுக்குக்  கார ணமாயிற்று.

தமிழ்மக்கள் எத்தனையோ துன்ப துயரங்களுக்கு ஆளான போதிலும் தமிழ்  அரசியல் தலைமைகள்  தமது சுயநலத்தை ஒருபோதும்  துறக்கத் துணிந்திலர். இதன் விளைவாக தமிழ் மக்களைத் தொட்ட துன்பம் தொலையமாட்டேன் என்று  அடம்பிடிக்கின்றது.
கட்சிக்குள் ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதனைத் தீர்ப்பதனை விடுத்து  மாற்றணியோடு çகோர்க்க நினைத்த முதலமைச்சரின் செயலில் எனக்குத் துளியளவேனும் உடன்பாடு இல்லை என்று கடுப்போடு கூறியுள்ளீர்கள்.
 
ஆயிரம் உண்டு இங்கு ஜாதி- எனின் அந்நியர் வந்து புகல் என்ன நீதி என்ற பாரதியின் பாடல் வரிகளை தங்கள் கருத்துக்குத் தக்க தாங்கு தூணாக முன்வைத்தீர்கள்.
இங்கு மாற்றணி என்ப தும் அந்நியர் என்பதும் யாரைக் குறிக்கும் என்பது தான் நம் கேள்வி.
தமிழினம் ஒன்றுவிட்டு ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் இது. அதற்கான தக்க களமாக தமிழ் மக்கள்  பேரவையை கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் பார்த்திருந்தால் மக்கள் இயக்கமாகிய தமிழ் மக்கள் பேரவைக் குப் பெருந்துணையாக இருந்திருக்கும். எனினும் எங்கள் துரதிர்ஷ்டம் கம்பவாரிதியின்  கண் ணோட்டத்தில் மக்கள் பேரவை ஒரு மாற்று  அணியாகக் காட்சி கொடுத்து விட்டது. 
என்ன செய்வது காலம் பிழைத்தால் மாரீசனும் மானாய்த் தெரிவது  விதியன்றோ. அதைத் தாங்கள்  அறியாதவரும் அல்லர்.
 
பொதுத்தேர்தல் காலத் தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் நடந்து கொண்ட முறைமை உயர்ந்தோருக்கு ஒரு போதும் உகந்ததல்ல என்று உரைத்தீர்கள்.  
வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் ஓர் அரசியல் வாதியன்று. அவர் நீதியரசர். நீதிக்குப் பங்கம்  செய்துவிடலாகாது என்பதில் உறுதியாக இருப்பவர்.
கறைபடியா ஒரு நீதி மான் எச்சந்தர்ப்பத்திலும் நீதியை உரைப்பதே தர்மம். அதுவே உயர்ந்தோருக்கு அழகு. அந்த உயர்ந்த- உத்தம  குணத்தையே நீதியரசர் விக்னேஸ்வரன் தேர்தல் காலத்தில்  உரைத்தருளினார்.
 
நல்லவர்கள், நேர்மையானவர்கள், மக்களுக்குப் பணியாற்றக்கூடியவர்க ளுக்கு  உங்கள் வாக்குகளை வழங்குங்கள் என்று கூறுவது ஒரு நீதியரசரின் கடமை என்பதை தாங்கள் ஏற்க மறுப்பீர்கள் என்று நாம் நினைக்கவில்லை.
 
தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து அழைத்து வந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தேர்தல் காலத்தில் மேற்கண்டவாறு கூறியதே சரியானது என்பது நம் தாழ்மையான கருத்து.
 
பொதுத்தேர்தலின் போது வடபுலத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் சேர்ந்து நின்று தாம் எடுத்த புகைப்படங்களை தேர்தல் விளம்பரத் திற்குத் தாராளமாகப் பயன்படுத்தியிருந்தனர்.  இதில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் ஒருவர்.
தேர்தல் காலத்தில் முதலமைச்சர் தடம் மாறியது உங்கள் தமிழ் மக்கள் பேரவையின் அங்குரார்ப் பணத்தோடு உறுதியாகி விட்டது என்று கம்பவாரிதி ஜெயராஜ் கூறிய போது நம் நெஞ்சடைத்துப் போனது  உண்மைதான்.
 
தன் நாயகன் இராமன் சிறைமீட்க வருவான் என்றிருந்த சீதாப்பிராட்டி சிறையில் இருந்து தப்பிக் கொள்ள அனுமனின் முது கேறிச் செல்லும்  வாய்ப்பிருந்த போதிலும் அது தன் நாயகனுக்கு இழுக் கென்றிருந்தாள்.
எனினும் சிறை மீட்ட பின்பு சீதையின் கற்பு மீது இராமன் கொண்ட சந்தேகம்  இருக்கிறதே அது எத்துணை வலியை சீதைக்குக் கொடுத்திருக்குமோ அதனிலும் பலம டங்கு துன்பத்தை தங்களின் மேற்போந்த கருத்து நமக்குத் தானமாய்த் தந்து போனது.
 
உங்கள் பேரவை என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். உங்கள் பேரவை ஒன்று தான் மீள் வாசிப்பில் உங்கள் பேரவையாகவும் இருக்கக்கூடிய  பொதுமை மிக்கது என்பதால் தமிழ் மக்கள் பேரவை உங்களுக்குமானது.
ஒரு கட்சியில் போட்டியிட்டுவிட்டு மாற்றுக் கட்சியுடன் தொடர்பு கொள்வது எவ்வகையிலும் ஏற் புடையதன்று எனக்கூறியிருந்தீர்கள்.
 
மாற்றுக்கட்சி என்று தாங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது தெரியவில்லை. 
சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி. ஆர்.எல்.எப். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு அங்கத்துவக்கட்சி. 
 
தமிழ்த்தேசியக் கூட் டமைப்பின் பேச்சாளராக இருந்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன். கூட்டமைப்பின் அனைத்து முடிவுகளிலும் அவரின் பங்கு இருந்து கொண்டேயிருக்கிறது. இதேபோல் புளொட் அமைப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி என்பது தாங்கள் அறிந்ததே. அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர். அவரும் தமிழ் மக்கள் பேரவை யின் முக்கிய உறுப்பினராகவுள்ளார்.
 
இதுதவிர இலங்கை தமிழரசுக் கட்சியும் பேரவையில் அங்கம் பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள் பேரவையின் அங்கத்தவர். 
 
நிலைமை  இதுவாக இருக்கும்போது மாற் றுக்கட்சிகள் என்றுரைப்பது எந்த வகையிலும் நியாயமன்று.
இவை ஒருபுறமிருக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  பொதுத்தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென தாங்கள் விரும்பியதாகக்  கூறியிருந்தீர்கள். அது உங்களின் நடுநிலைத்தன்மைக்கு சான்று பகரும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அமைப்பை விடுதலைப்புலிகள் தோற்றுவித்தபோது கஜேந்திரகுமார் பொன் னம்பலமே முதன்மையானவராக இருந்தார். அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் மிகவும் இறுக்கமான சூழ்நிலையில் இருந்து கொண்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர்.
தமிழினத்தின் மீது குமார் பொன்னம்பலம் கொண்ட பற்றை  எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. 
தமிழ்மக்களின் உரி மைக்காக குரல் கொடுத் ததால் குமார் பொன்னம் பலத்தை துப்பாக்கி  ரவைகள் துளைத்துக் கொண்டன. இத்தகைய ஒரு தியாகியின் மகனே கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவரும்  தமிழ் மக்கள் பேரவையில் அங்கத்துவம் பெற்றுள்ளார். 
எனவே தமிழ் மக்கள் பேரவையை எந்த வகை யிலும் மாற்றுக் கட்சியாக தாங்கள் பார்க்க வேண்டிய தேவை இருக்காது என நம்புகின் றேன்.
 
(நாளை தொடரும்)
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 CLICK HERE TO DOWNLOAD
 
 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.