வாருங்கள் சேருங்கள் தேருங்கள் - ஸ்ரீ. பிரசாந்தன்

வாருங்கள் சேருங்கள் தேருங்கள்  - ஸ்ரீ. பிரசாந்தன்
களம்;: வரணி
கதாமாந்தர்: அடியவர், அம்பிகை

அடியவர்:
பேர்புகழ் ஒன்றும் வேண்டிய தில்லைப் பெருமகளே!
ஓர்குவைப் பொன்பொருள் உன்னிடம் நாமென்றுங் கேட்டதிலை
பார் வியக்கின்ற பதவியோ வீடோ பகர்ந்தறியோம்
தேர் வடம் பற்ற அருள்தருவாய் எங்கள் திருமகளே!

கூவிக் கூவி அழைக்கின்றனர் இந்தக் குவலயத்தில்
பாவியேந்தமை பக்கம் மாறென்றுபல் சமயத்தினர்,
தேவியே! உந்தன் திருமுகம் அன்றிப் பிறிதறியோம்
ஆவி போகும்முன் உன்வடம் பற்ற அருள்புரியே.

அம்பிகை: 
வாருங்கள் யாவரும், அன்பெனும் வடம்பற்ற வருத்தமின்றி
ஆர்உங்கள் பாதையை அடைப்பவர்? ஆலய முன்றலிலே
பேரங்கள் கோசங்கள் பிரிவினை வாதங்கள் தாய்க்கிலையே
தேர்உங்கள் சொத்தென்று தேருங்கள் எந்தன் குழந்தைகளே!
 
۩۩۩۩۩
 

செய்தி :
 




 
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.