கவியமுதம் 12

கவியமுதம் 12

பொங்குகிற அருள் முகத்தோடெங்கள் ஐயன்

                பொலிந்திடவே அடியரெலாம் புடையே சூழ

தங்கரதம் ஏறித்தான் தரணி தன்னைத்

தயவோடு சுற்றிவரும் காட்சி கண்டு

அங்கமெலாம் உருகிப் போய் அழுகை பொங்க

                அமரர்களும் நிலம் காண வந்து நிற்பர்

சங்கமதில் தலைவனென இருந்து எங்கள்     

                தமிழ் வளர்த்த நல்லூரான் பெருமை என்னே?

 

 

வேறு

கந்தனவன் முகம் தங்கம்

கையிருக்கும் வேல் தங்கம்

முந்துகிற ரதம் தங்கம்

                முழுவதுமாம் அணி தங்கம்

கெந்துகிற மயில் தங்கம்

                கிளர்ந்து எழும் கொடி தங்கம்

சிந்துகிற நகை தங்கம்

                சேர் அடியார் மனம் தங்கம்

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.