கந்தன் கவியமுதம் 10

கந்தன் கவியமுதம் 10

ஆதவனுக்கொளி கொடுக்கும் எங்கள் ஐயன்

                அருள் பொழிந்து வருகின்ற நாளில் நல்ல

நாதனவன் ஜோதியிலே வெய்யோன் தானும்

நலம் குன்றி ஒளி மழுங்கி நிற்பான் கந்தன்

பூதகணம் புடை சூழப் பொலிந்து வந்து

                போற்றுகிற அடியவர்க்கு அருளும் செய்வான்

கீதமொடு நாதங்கள் கிளர்ந்து பொங்கக்

                கேதம் அறும் கேட்பார்க்கு அனைத்தும் கிட்டும்

 

எழு குதிரை தான் பாய எழுந்து நிற்கும்

                ஏற்றமிகு சூரியனைத் தனதாய் ஆக்கி

மழுவுடைய சிவன் மகனும் மண்ணில் வந்தால்

                மனமெல்லாம் உருகித்தான் அடியார் தங்கள்

நழுவுகிற உடை மறந்தும் நல்லைக் கந்தன்

                நல் அழகில் தமை இழந்து மயங்கி நிற்பர்

அழுதுருகி அவர் வணங்க நல்லூரானின்

                அடியர்களால் யாழதனில் அருவி பாயும்

 

Share:
Copyright © 2026 - உகரம் - All rights reserved.