அரசியற்களம் 19 | ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!

அரசியற்களம் 19 | ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!!
-கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-
 
லகம் பூராகவும் பெரும் பரபரப்பு.
இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை,
அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக,
சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை,
ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது.
'குடுத்தார் பார் ஒரு குடுவை',
'உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்',
'மனுசன் சொன்னது அத்தனையும் சரி',
இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர்,
கொண்டாடிக் குதூகலிக்கின்றனர்.
நல்லவேளையாக சுமந்திரன் குழுவினரிடமிருந்து,
இன்னும் பதில் அஸ்திரப்பிரயோகம் எதையும் காணவில்லை.
அதனால் சண்டை உச்சத்தைத் தொட்டு அப்படியே நிற்கிறது.
ஆனால் இது தொடரப்போவது மட்டும் உறுதி.
 

 

 
⋇⋇⋇
 
பல்குழுவும்  பாழ் செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் ஒரு நாட்டுக்கு ஆகாது என்றான் வள்ளுவன்.
ஒன்றினோடு ஒன்று மாறுபட்ட பல குழுக்களும்,
ஒன்றாய் இருந்துகொண்டே பாழ் செய்கின்ற உட்பகையும்,
சந்தர்ப்பம் வந்தால் அரசனை அலைக்கழிக்கும் கொலைச் செயலுடைய குறும்பரும்,
இல்லாதிருப்பதே ஒரு நாட்டினுடைய இலட்சணம் என்பது இக்குறளினுடைய பொருள்.
நம் தலைமையோ வள்ளுவர் வேண்டாமென்று சொன்ன அத்தனையையும்,
உருவாக்கி வைத்திருக்கிறது.
⋇⋇⋇
 
நம் ஈழத்தமிழர் வரலாற்றில் இது ஒன்றும் புதிய விடயம் அல்ல.
ஆனால் அப்பழமையிலும் ஒரு புதுமை செய்கிறது நம் கூட்டமைப்பு.
முன்பு துரையப்பா, டக்ளஸ், பிள்ளையான், கருணா என,
மாற்றணியில் சேர்ந்தாரை எட்டப்பர்கள் என்றனர்.
இப்போது கூட்டமைப்பினர் தம் அமைப்புக்குள்ளேயே,
ஆளுக்காளை எட்டப்பராய் இனங்காட்டி மகிழ்கின்றனர்.
வெட்கப்படவேண்டிய புதுமை.
⋇⋇⋇
 
வேறுபட்ட அணிசார்ந்த பலபேரை உள்வாங்கி நின்ற கூட்டமைப்புக்குள்,
ஏற்கனவே உட்குத்துக்கள் பல நடந்துகொண்டிருந்தன.
வடமாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது,
முக்கியமான முதலமைச்சர் பதவிக்கு,
ஏற்கனவே இருந்த அணிகளில் ஒருவரைத் தேர்ந்தெடுக்காமல்,
வெளியில் இருந்து கட்சிபேதமற்ற, அறிவாளியான, ஆளுமையுள்ள,
ஒரு பிரமுகரை  உட்கொணர்ந்தால்,
அவரால் கூட்டமைப்புத் தலைமை வலிமைபெறும் என்று நினைத்த,
சமூகத்தின் மீதான அக்கறையாளர்கள் பலர்,
அதற்குப் பொருத்தமானவர் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனே என,
குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.
⋇⋇⋇
 
இக்குரல் வெளிவந்ததும் அப்பதவிக்காய் ஆவலோடு காத்திருந்த,
கூட்டமைப்புக்குள்ளிருந்த சிலர்
போர்க்கொடி தூக்க ஆரம்பித்தனர்.
அந்த நேரத்தில் நீதியரசரும் அப்பதவியை ஏற்க மறுத்து நின்றார்.
பின்னர் பலரும் வற்புறுத்த, சற்று இறங்கி வந்து,
'எல்லோரும் ஒன்று சேர்ந்து அழைத்தால் வருகிறேன்' என்று அறிக்கை விட்டார்.
சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரது அழுத்தத்தின் பெயரில்,
கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து நீதிபதியை அழைக்க,
தனக்கிடப்பட்ட இடையூறில்லாத இராஜபாட்டையில் கம்பீரமாய் நடந்து வந்து,
அமோக வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானார் நீதிபதி.
இது நடந்து முடிந்த கதை.
⋇⋇⋇
 
தியாகம், போராட்டம், அரசியல் அனுபவம் ஏதுமின்றி,
அரசியலுக்குள் நுழைந்து, மிகச் சுலபமாகப் பதவியேற்ற நீதியரசர்,
கூட்டமைப்பைப் பலப்படுத்துவார் என எதிர்பார்க்க,
இன்று அவரே கூட்டமைப்பின் உடைவுக்கு அத்திவாரம் போட்டிருக்கிறார்.
நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று!
⋇⋇⋇
 
கடந்த மூன்று தசாப்தங்களாக,
சண்டைக்கு மேல் சண்டையாகப் பார்த்து,
சண்டையே அரசியல் எனும் முடிவோடிருக்கும்,
நம்மில் பலரின் இயல்பறிந்து,
மாகாணசபைத் தேர்தலின்போதே,
'நாம் தொடங்கியிருப்பது மூன்றாங்கட்டப்போர்' என்பதாய் அறிக்கைவிட்டு,
சண்டைப்பிரியர்களின் ஆதரவை அள்ளிக் கொண்டார் நீதியரசர்.
பின்னர் பதவிக்கு வந்ததன் பின்னான இந்த இரண்டரை ஆண்டுகளில்,
முதலமைச்சரின் வாய்ச்சண்டைகள்,
பிரபாகரனின் போர்ச்சண்டைகளை விடப் புகழ்பெற்றன.
⋇⋇⋇
 
கவர்னருடன் சண்டை,
வடமாகாணசபைப் பிரதமசெயலாளருடன் சண்டை,
பின்னர் தமது கட்சிக்குள்ளேயே இருந்த,
முன்னாள் போராளிக்குழுக்களுடன் சண்டை,
பின் தனது அனாவசிய அறிக்கைகளால்,
புலம்பெயர் தமிழர்களுடன் சண்டை,
நமக்கு ஆதரவளித்த தமிழ்நாட்டு அமைப்புக்களுடன் சண்டை,
ஜனவரி எட்டின் பின்னர் தமிழர் ஆதரவால் வெற்றி பெற்று,
உறவு கொண்டாடவந்த புதிய பிரதமருடன் சண்டை,
இங்ஙனமாய் முதலமைச்சரின் சண்டைப்பட்டியல் நீண்டு,
இப்போது தனைக்கொணர்ந்த கூட்டமைப்புடனேயே சண்டை எனும்,
சிகரம் தொட்டிருக்கிறது.
⋇⋇⋇
 
யாரும் சண்டை பிடித்தால் கைதட்டி மகிழ்ந்து,
கூடிக்கொண்டாடும் ஒரு கூட்டம்,
முதலமைச்சரின் முடிவில்லாச் சண்டைப்பட்டியலால் ஈர்க்கப்பட்டு,
'தலைவரென்றால் இவரல்லவோ தலைவர்!' என சிலிர்த்துநிற்கிறது.
அந்தக் கூட்டம்தான்,
கூட்டமைப்பின் தலைமையைப் பழி சொல்லி சுமந்திரனைத் தாக்கி,
முதலமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையால் மகிழ்ந்து நிற்கிறது.
'நல்ல குடுவை', 'சப்பலடி', 'பேவெட்டு' என்பதாய்,
அவர்கள் காட்டும் மகிழ்ச்சியைக் காண நெஞ்சு பதறுகிறது.
⋇⋇⋇
 
தம்பியின் கழுத்தை அண்ணன் வெட்ட அதை ரசித்து,
'வெட்டென்றால் இதுவெல்லவோ வெட்டு',
'ஒரே வீச்சில் தலை எப்படி இரண்டாயிற்று பார்த்தாயா?'
'சேட்டை விட்டவருக்கு நல்லா வேணும் துலைஞ்சார்' என்பதாய்,
கொண்டாடும் இம்முட்டாள் கூட்டத்தைக் காண எரிச்சல் வருகிறது.
வென்றது அண்ணனோ தம்பியோ வீழ்ந்தது குடும்பம் என்னும்,
உண்மை புரியாத அறிவிலிகள் !
இவர்களைத்தாண்டி நம் இனம் எப்படி உருப்படப்போகிறது?
⋇⋇⋇
 
முதலமைச்சர் தனது அறிக்கையால்,
கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவையும்,
மாகாணசபைக் குழுவையும் வெவ்வேறாய்ப் பிரித்து,
இரண்டும் வெவ்வேறு என்றாற்போல ஒரு உணர்வை உண்டாக்கி,
தான் தமிழரின் ஒரு தனித்தலைமை என்பதாய்,
ஒரு புதிய வியூகம் அமைத்துச் செயற்படத் தொடங்கியிருக்கிறார்போல் தெரிகிறது.
அதனாற்றான் சுமந்திரனால் குற்றச்சாட்டுக்கள் தொடுக்கப்பட்ட பின்னர்,
என்றுமில்லாத வகையில் தன் அமைச்சர்கள் அனைவரையும் ஒன்று கூட்டி,
ஜனாதிபதியைப் பார்க்க அழைத்துச்சென்றார் அவர்.
அண்மைக்காலமாக அமைச்சர்களை மாற்றவேண்டும் என்று எழுந்த,
கோரிக்கைகளைக் கண்டு, அஞ்சி இருந்த மாகாண அமைச்சர்கள்,
தம்மைக் கொணர்ந்த கட்சிக்குத் துரோகம் செய்து,
முதலமைச்சருக்குத் துணைசெய்து நிற்கின்றனர்போலும்.
முதலமைச்சரின் வியூகத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி இது.
⋇⋇⋇
 
அது ஒருபுறம் கிடக்கட்டும்.
எனக்குத் தேவையற்ற விடயம் என்றாலும்,
முதலமைச்சரின் அறிக்கை கண்டு 'ஆஹா இதுவல்லவோ பதில்' என்று,
மெய்சிலிர்த்து நிற்கும் பொய்மையாளர்களின் கண் திறப்பதற்காக,
முதலமைச்சரால் வெளியிடப்பட்ட சுமந்திரனுக்கான பதில் அறிக்கை பற்றி,
சில சொல்லவேண்டியிருக்கிறது.
அது புத்திசாலித்தனமான,
மற்றவர்களை ஈர்க்கத்தக்க ஒரு பதிலறிக்கையேயன்றி,
உண்மையான, நேர்மையான ஒரு பதிலறிக்கையாய் இல்லை என்பது மட்டும் நிச்சயம்.
⋇⋇⋇
 
'என் அன்புக்குரிய மாணவன் சுமந்திரன்' என்று தொடங்குவதிலிருந்து,
'அவருக்கு இறைவன் ஆசி என்றென்றும் இருப்பதாக' என்று பிரார்த்தித்து முடிப்பதுவரை,
அவ் அறிக்கையில் அதிகம் உண்மைத்தன்மை இருப்பதாய்த் தெரியவில்லை.
கொழும்பில் இருக்கும்போதும், யாழ்ப்பாணத்தில் இருக்கும்போதும்,
ஏற்படும் மனஉணர்வுகளின் வேறுபாடுகளைச் சொல்லி,
'இவர் கொழும்பு மனிதர்' எனும் குற்றச்சாட்டிலிருந்து,
நாசூக்காய் வெளிவந்திருக்கிறார் முதலமைச்சர்.
இவை அவரது சட்டத்துறைசார்ந்த கெட்டித்தனங்கள்.
⋇⋇⋇
 
அதற்கப்பால் அவர் விட்டிருக்கும் நீண்ட அறிக்கையில்,
நாம் கவனிக்கவேண்டிய சிலவிடயங்கள் இருக்கின்றன.
அவ்விடயங்களும், அதுபற்றி நாம் சிந்திக்கவேண்டிய குறிப்புக்கள் சிலவும்,
கீழே தரப்படுகின்றன.
 
        மாகாணசபையில் தான் கொண்டுவந்த இன அழிப்புப் பற்றியதான அறிக்கையை ஆரம்பத்தில் ஆதரித்த சுமந்திரன் ஜனவரி எட்டின் பின்னர் அதைக் கொண்டுவர விரும்பவில்லை என்கிறார் முதலமைச்சர். இது முதல் விடயம்.
 
குறிப்பு:-
இதிலிருந்து இரண்டு விடயங்கள் தெரியவருகின்றன. ஒன்று இனஅழிப்புப் பிரேரணைக்குச் சுமந்திரன் எப்போதுமே எதிர்ப்பானவர் அல்லர் என்பது. இரண்டாவது ஜனவரி எட்டின் பின்னான மஹிந்தவுக்கு எதிரான புரட்சியில் தற்போதைய அரசும், கூட்டமைப்பும் ஒன்றிணைந்து செயற்பட்டதால் அவர்களுடனான சமாதான முயற்சிக் காலத்தில் அதிகம் பகையை வளர்க்கவேண்டாம் என்று சுமந்திரன் நினைத்திருக்கலாம் என்பது. இவ்விரண்டும் அரசியல் உணர்ந்த எவராலும் சரி என்று ஒத்துக்கொள்ளபடக் கூடியவையே.                                                                                                                                                
         அவ் அறிக்கையை சுமந்திரன் எதிர்ப்பதற்கான காரணம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான அவரது நெருங்கிய தொடர்பே என்பது முதலமைச்சரின் அடுத்த குற்றச்சாட்டு. இது இரண்டாவது விடயம்.
 
குறிப்பு:-
ரணிலோடு சுமந்திரனுக்கு நட்பு இருக்கிறதோ இல்லையோ, முதலமைச்சருக்குப் பகையிருப்பது நிச்சயமாய்த் தெரிகிறது. அப்பகையின் காரணமாக ரணிலுக்கு இக்கட்டை ஏற்படுத்தவே முதலமைச்சரால் இனஅழிப்பு அறிக்கை பயன்படுத்தப்பட்டிருக்கிறதுபோல் தெரிகிறது. அன்றேல் அப் பிரேரணையை மாகாணசபையில் எப்போதோ கொண்டு வந்திருக்கலாம்.  ரணில் பதவியேற்றதும் சம்பந்தனோடும், சுமந்திரனோடும் முதலமைச்சரும் ரணிலைப் பார்க்கச்சென்றது அவரின் அறிக்கையூடாகவே தெரியவருகிறது. சுமந்திரனுக்கும் சம்பந்தனுக்கும் ரணிலுடனான தனித்தொடர்பு இருந்திருந்தால்  அவர்களது முக்கியமான அந்தச் சந்திப்புக்கு முதலமைச்சரையும் அவர்கள் அழைத்துச்சென்றிருப்பார்களா?
         சுமந்திரனின் கட்சி இப்பதவியைத் தனக்குத் தரவில்லை என்றும், எங்கள் கட்சிக்கு நீங்கள் விசுவாசமாக நடக்கவேண்டுமென்று நிபந்தனையிட்டு எனக்கு இப்பதவியை வழங்கவில்லை என்றும் கூறியிருக்கும் செய்தி மூன்றாவது விடயம்.
 
குறிப்பு:-
முதலமைச்சரின் இக்கூற்று பொய்யானதும், முன்னுக்குப்பின் முரணானதுமாகும் என்பது வெளிப்படை. நீதியரசரை முதலமைச்சர் ஆக்குவதில் அந்நேரத்தில் உறுதியோடு இருந்தவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே. மற்ற அணியினரில் பலர் நீதியரசர் உள்வருவதையே விரும்பவில்லை. இறுதியில் சம்பந்தனின் அழுத்தத்தின் பெயரிலேயே அனைவரும் நீதியரசரைக் கொணர சம்மதித்தனர். முதலமைச்சரான பின்னும் அவருக்கும், கூட்டமைப்புக்குள் இருந்த முன்னாள் போராளிக்குழுக்களுக்கும் இடையிலான உறவு சிதைந்தேகிடந்தது. அமைச்சர்கள் தேர்விலும், சத்தியப்பிரமாண விடயத்திலும் முதலமைச்சர் மற்றவர்களின் கருத்துக்கு முரணாய், தன் இஷ்டப்படியே நடந்தார். அப்போது அவற்றால் எழுந்த சச்சரவுகள் அனைவரும் அறிந்தவை. அதுமட்டுமன்றி முதலமைச்சர், 'முன்னாள் போராளிக்குழுக்களோடு என்னால் இணைந்து இயங்க முடியாது' என வெளிப்படையாகவே அறிக்கைவிட்டார். இவையெல்லாம் நடந்து முடிந்த உண்மைகள். அப்படியிருக்க தன்னை இப்பதவிக்கு சுமந்திரனின் கட்சி கொண்டுவரவில்லை என்பது முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் விடயமே. தன்னை இவர்கள் பதவிக்குக் கொண்டு வரவில்லை என்று சொல்லிவிட்டு, எங்கள் கட்சிக்கு நீங்கள் வி
Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.