மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. ...

28 Aug 2017

மாகாண சபையை பொறுத்தவரையில் நடந்த மிகப்பெரிய தவறு. அந்தத் தளத்தையும் அரசியல் தளமாக மாற்ற முனைந்ததே. மாகாண சபை என்பது அபிவிருத்திக்கான தளம். வடக்கின் கல்வி விளையாட்டு கலாச்சாரம் கூட்டுறவு சமூக அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தி விவசாயம் மீன்பிடி போக்குவரத்து என அபிவிருத்தியின் அத்தனை அடிப்படைத் துறைகள் மீதும் ஆதிக்கம் செலுத்தத்தக்க வல்லமை மாகாண சபைக்கு உண்டு. ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதை விட மாகாண சபை அமைச்சராக இருப்பது பெரிய விடயம். அதேபோன்று அமைச்சராய் இருப்பதை விட முதலமைச்சராய் இருப்பது பெரிய விடயம். இந்த ஆசைகள் நம் தலைவர்கள் பலருக்குள் வந்துவிட்டது. இருந்து பாருங்கள் தேசிய அரசியலில் உள்ள பலர் அடுத்த முறை மாகாண அரசியலுக்குள் வர எத்தனிப்பார்கள்.இந் நிலையில் மாகாண அரசியலில் தமக்கு சவாலாக உள்ள சிலரை அகற்ற முனைவதன் விளைவு தான் அத்தனைக் குழுப்பத்தினதும் அடிப்படை. இது இருக்க அபிவிருத்திக்கான தளத்தில் அரசியல் செய்ய முதலமைச்சரை தூண்டியவர்களே முதல் குற்றவாளிகள். முதலமைச்சர் அபிவிருத்தி செய்யவே விளைந்தார். அரசியல் செய்யவல்ல. அதனாலேயே மகிந்த முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஆரம்பத்தில் அபிவிருத்தி சம்பந்தமாகவே கதைத்தார். அவர் நம்பினார். தான் அபிவிருத்தி செய்ய தேசிய அரசியலில் உள்ள பெருந்தகைகள் அரசியல் செய்வார்கள் என. ஆனால் அவர்கள் தமக்கான அரசியல் செய்து இன நன்மைக்கான அரசியலை செய்ய மறந்தார்கள். அதனை உறுதிப்படுத்த பல ஆதாரங்களை சொல்ல முடியும். இது கட்டுரை அல்ல கருத்து என்பதால் குறுக்கிவிடுகிள்றேன்.

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.