இன்று நாம் 21 நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந...

25 Dec 2015

இன்று நாம் 21 நூற்றாண்டில் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதி என்று சொல்லை உச்சரிப்பதே இயலாமையின் வெளிப்பாடாகும் என்பதுடன் நாகரிகமற்றதுமாகும்.

தமிழ் தலைவர்கள் சுயலாபங்களுக்காக மக்களின் தேவைகளை கிடப்பில்போட்டு எழுந்தமானமாக செயற்பட்டு குட்டு உடைபடுகின்றபோது, சதிவலையில் சிக்கிவிட்டார்கள் என்று அவர்களது விசிறிகள் சாட்டுபோக்கு சொல்வது வழமை. அதே பல்லவியை பாடி ஜெயராஜ் அற்ப ஆசைகளுக்காக சோரம்போவோர்க்கு, நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள் என்றும் மீண்டும் தைரியம் கொடுக்கின்றார்.

ஆகவே ஆன்மீகவாதியாக இனம்காணப்பட்டுள்ள ஜெயராஜ் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெள்ளையடித்தல், நற்சான்றுதல் வழங்குதல் போன்ற செயற்பாடுகளை நிறுத்தி, நாங்கள் வாழுகின்ற இதே காலப்பகுதியில் வாழ்ந்த ஒரு ஒப்பற்ற போராளியான சேகுவேராவின் வாழ்வில் அவர் செய்த தியாகங்களையும், அவர் மக்களுக்காக எவ்வாறு உழைத்தார் என்பதையும் தான் சாமரம் வீசுகின்ற தமிழ் அரசியல்வாதிகளுக்கு எடுத்துரைக்கவேண்டும்.

ஆஜென்டீனாவில் ஓர் மேட்டுக்குடியில் பிறந்த சேகுவேரா தனது செல்வந்த மற்றும் சுகபோக வாழ்க்கையை கைவிட்டு கியூபா மக்களுக்காக போராடி மாபெரும் வெற்றிகாண்கின்றார். கியுபாவில் புதிய அரசு அமைகின்றது. கீயூபா மக்கள் சேகுவேராவை உன்னதபோராளியாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அவருக்கு கியூபாவில் குடியுரிமை வழங்கி அந்நாட்டின் அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சுப்பதவியையும் வழங்குகின்றார்கள். வெளியுறவு அமைச்சுக்கு அப்பால் பல்வேறு துறைகளில் தனது நிபுணத்துவங்களை சேகுவேரா வழங்கிக்கொண்டிருந்தார்.
ஆனால் இத்தனை வேலைப்பழுவுக்கும் மத்தியில் அவர் பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து தானும் ஒரு பாட்டாளியானர். தனது நாளில் 4 மணித்தியாலயங்களை உடலுழைப்புக்கு ஒதுக்கினார். கட்டுமானப்பணிகளில் சிற்றூழியனாக, கப்பலிலிருந்து மூடையிறக்கும் நாட்டாமையாக உடலால் மேற்கொள்ளப்படும் கடின உழைப்புகள் யாவற்றிலும் பங்காளியானார்.

ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்து நெருக்கப்படும் மக்களுக்காக போராடி ஒர் பிரபுவாகவே வாழ்வதற்கு வழியிருந்தும், அவர் எவ்வாறு வாழ்ந்தார் என்பதை இப்படம் எடுத்துரைக்கின்றது.

ஆனால் இன்று கள்வர்கள், கடைந்தெடுத்த காவாலிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கொலைகாரார்கள், நயவஞ்சகர்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானோராக உள்ளதுடன் இவர்கள் பிரபுக்களாகவே இன்றும் வலம்வருகின்றனர். மக்களின் வாக்கில் பிரதிநிதிகளாகி அதற்கு சம்பளம் வாங்கும் பேர்வழிகளை ஊதியத்திற்குரிய உழைப்பை வழங்க கேட்கவேண்டும்.

பீமன்

Share:

Related Posts

Copyright © 2024 - உகரம் - All rights reserved.